இது குறித்து பேசிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள், “கொடநாடு வழக்கில் A1 , A2 – வாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் இருவரும் ஜாமீனில் வெளியே இருந்தால் முக்கிய மூளையாக செயல்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால்,

அப்போதிருந்த எடப்பாடி அரசு காவல்துறையை வைத்து பொய்யான இந்த மிரட்டல் வழக்கை ஜோடனை செய்தது. ஆனால், காவல்துறையால் அதற்கான சான்றுகளை நிரூபிக்க முடியவில்லை. உண்மைத்தன்மையை விசாரணை நடத்திய மகிளா நீதிபதி அவர்கள் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை அளித்திருக்கிறார்” என்றனர்.