போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனை வழங்க இருக்கும் சத்யஸ்ரீ பூமிநாதன் அவர்கள் தமிழகத்தின் முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் ஒன்றான King Makers IAS அகாடமியின் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் ஆவார்.
பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. கல்வியாளர் என்பதைத் தாண்டி, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பேச்சாளராகவும் இருக்கிறார்.
அரசுப் பணிக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்பிக்காமல், அவர்களுக்குத் தேவையான மன உறுதி, ஆளுமைத் திறன் மற்றும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றை வழங்குவதில் இவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
குறிப்பாக, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் இருந்து வரும் மாணவர்கள் ஐஏஎஸ் கனவை நனவாக்க வேண்டும் என்பதில் இவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவரது வழிகாட்டுதலில் செயல்படும் King Makers IAS அகாடமி , நவீன தொழில்நுட்பம் மற்றும் முறையான திட்டமிடல் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.