கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நடக்கும்போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பணி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் அரசு சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
எனவே கோவிட் காலத்தில் பணிபுரிந்தவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றதன் விளைவாக, தற்போது அரசு அவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.