கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Dinamani2f2024 10 222f1kzqnn7v2frain Weather School Students Pti Edi.jpg
Spread the love

தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *