கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால், அங்கு யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
அண்மைய காலமாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் ஊர்ப்பகுதிகளுக்குள் அதிகமாக நடமாடத் தொடங்கியுள்ளன. காட்டை ஒட்டியுள்ள ஊர்கள் வழியாக நகர பகுதிகளுக்கும் யானைகள் வரத் தொடங்கியுள்ளன.

யானைகள் விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் உள்ளது. அதே நேரத்தில், காடுகளை ஒட்டி ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சி பணி காரணமாக யானைகளின் பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.