கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறார்கள்.

இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ரூ. 4,000க்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்ததால், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.