கோபத்தில் பாலமுருகன் இன்று காலை ஶ்ரீ பிரியா தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு சென்றுள்ளார். அந்தப் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரியாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
மனைவியைக் கொலை செய்துவிட்டு, அதே இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பாலமுருகன், அதை செல்ஃபி எடுத்துள்ளார். பிறகு அதை “துரோகத்தின் சம்பளம் மரணம்” என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதுதொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.