கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்? | Supporters of Senthil Balaji is contesting in Coimbatore South constituency

Spread the love

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், மாற்று வேட்பாளராக அவர் தம்பி அசோக்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த கே.எஸ்.ராஜகோபால், பி.கதிரவன், கே.விஜயன், ஜே.சூரியகுமார், கே.ராஜபாண்டியன், எஸ்.சதீஷ்குமார், ஜே.பிரவீண்குமார், ஜி.பாபு, எல்.ஹக்கிம், எம்.முஹமது இஸ்மாயில், என்.அபிலாசன், டி.விக்னேஷ்வரன், பி.மனோஜ், எல்.ஸ்டீபன்ராஜ், பி.யுவராஜ், கே.தினேஷ்குமார், பி.பழனிவேல், எம்.திருஞானம் ஆகிய 18 பேர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆராயும்போது பெரும்பாலானவர்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பதும், பலரது முகநூல் பக்கங்களை நண்பர்கள் அல்லாத மற்றவர்கள் பார்க்க முடியாதபடி பூட்டி வைக்கப்பட்டுள்ளதும் தெரியவருகிறது. வழக்கமாக முக்கிய அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களைப் பயன்படுத்தி கூடுதல் பூத் ஏஜென்ட்டுகளை வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் பயன்படுத்தவும், அவர்களது கணக்கில் தேர்தல் செலவுகளை செய்தல் போன்றவற்றைச் செய்வதும் வழக்கம். ஆனால் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கரூரைச் சேர்ந்த 18 பேர் போட்டியிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *