அசுவினி, பூசம், அவிட்டம்: இந்த நட்சத்திர நாள்களில் தங்கக் கிரீடம் மற்றும் அறுகம்புல் அலங்காரம் செயப்படுகிறது.
பரணி, சுவாதி: அறுகம்புல் மாலை அலங்காரம்
கிருத்திகை: வெள்ளிக்கவச அலங்காரம்
ரோகிணி, பூரட்டாதி, ரேவதி: அன்னம் அலங்காரம்
மிருகசீரிடம், பூரம், உத்திரம்,
அனுஷம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.
திருவாதிரை, அஸ்தம்: சந்தன அலங்காரம்.
புனர்பூசம்: தங்கக் கவச அலங்காரம்.
ஆயில்யம்: தங்க கிரீட அலங்காரம்.
மகம், கேட்டை, உத்திரட்டாதி: திருநீறு அலங்காரம்.
சித்திரை: தங்கக் கிரீடம் மற்றும் வெள்ளிக் கவச அலங்காரம்.
மூலம்: தங்கக் கிரீடம் மற்றும் ரோஜா மாலை அலங்காரம்.
பூராடம்: வெற்றிலை அலங்காரம்.
உத்திராடம்: வெள்ளிக் கவசம், அறுகம்புல் அலங்காரம்.
விசாகம், திருவோணம்: சுவர்ண அலங்காரம்.
சதயம்: குங்கும அலங்காரம்.
ஈச்சனாரி விநாயகரை வழிபடுவதன் மூலம் கல்வியில் மேன்மை, இனிய இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்பதால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் அவரை நாடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வாய்ப்பிருக்கும் என்பர்கள் ஒருமுறை ஈச்சனாரி விநாயகரை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும். நடப்பவை நலமாகும்.