கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்டத்தில் திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், ஏராளமான மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.