அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, “பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை” என்று குறிப்பிட்டார்கள்.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, “இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
“வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது” என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்.
இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.