கிராமப்புறங்களில், சங்குப்பூ இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து, கட்டிகள் மீது தடவும் வழக்கம் இன்றும் உள்ளது. சங்குப்பூவின் இதழ்களைப் பிற மூலிகைகளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் (Face Pack) அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) போல இன்று பயன்படுத்துகிறார்கள்.
சங்குப்பூ சருமத்திற்கு மென்மையைத் தருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சங்குப்பூவின் மலர்கள் பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால், அவற்றை உணவு மற்றும் அழகுப் பராமரிப்பு என உள்மருந்தாகவும் வெளிமருந்தாகவும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

ஆனாலும், சங்குப் பூக்களில் இயற்கையான நிறமிச் சத்துகள் (Pigments/Flavonoids) அதிகம் உள்ளன. அழகுப் பராமரிப்பில் இவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், எதில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து உபயோகிப்பது பாதுகாப்பானது.
தற்போது அழகு சார்ந்த தயாரிப்புகளில் இது குறித்து, பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் வெளியான பிறகு இது குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என நம்புவோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.