சசிகலா: ”இனி பொறுமையாக இருக்க முடியாது!” – புதிய கட்சி தொடங்கிய சசிகலா! |sasikala launches new party jayalalitha anna mgr

Spread the love

இந்த மாநாட்டில், சசிகலா அவருடைய புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் கொடியில் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய கட்சி தொடங்குவது பற்றி இந்த மாநாட்டில் சசிகலா, “அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன்.

9 ஆண்டுகள் பொறுமையாக இருந்ததுபோல், இனி என்னால் இருக்க முடியாது. நான் பார்த்து பதவியில் உட்கார வைத்தவர்கள், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஈட்டியால் முதுகில் குத்தினார்கள்.

என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது, தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை. 5 நாளுக்கு மேல் எனக்கு பரோல் தரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.

கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி” எனக் கூறியிருக்கிறார். கட்சியின் பெயரை கூடிய விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *