சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Assembly Speaker should respect traditions Anbumani insists

1380250
Spread the love

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை மரபு​களை பேர​வைத் தலை​வர் மதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பாமக​வுக்கு எதி​ரான செயல்​களில் ஈடு​பட்​டதற்​காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்​கப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக புதிய கொற​டா​வாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்டு 108 நாட்​கள் ஆகின்​றன. அதே​போல், பேரவைக் குழுத் தலை​வராக ஜி.கே.மணி நீக்​கப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக தரு​மபுரி எம்எல்ஏ எஸ்​.பி.வெங்​கடேஸ்​வரன், துணைத் தலை​வ​ராக மேட்​டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் கடந்த செப்​.24-ம் நாள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.

இதற்​கான எனது கடிதங்​கள் பேர​வைத் தலை​வரிடம் கொடுக்​கப்​பட்டுவிட்​டன. ஆனால், பாமக​வின் சட்​டப்​பேரவை குழு​வுக்கு முறைப்​படி தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிர்​வாகி​களை அங்​கீகரிக்க பேர​வைத் தலை​வர் அப்​பாவு தொடர்ந்து மறுத்து வரு​கிறார். நடுநிலை தவறாமல் செயல்பட வேண்​டிய பொறுப்​பில் இருக்​கும் ஒரு​வர், அரசி​யல் காரணங்​களுக்​காக அறம் மற்​றும் மரபு​களை மதிக்​காமல் செயல்​படு​வது நியாயமல்ல. பேர​வைத் தலை​வரின் செயல்​பாடு கண்​டிக்​கத்​தக்​கது.

இனி​யா​வது பேர​வைத் தலை​வர் அறத்​துக்​குப் பணிந்து நீதியை மதிக்க வேண்​டும். அந்த வழி​யில் பாமக​வின் சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ராக எஸ்​.பி.வெங்​கடேஸ்​வரன், துணைத்​ தலை​வ​ராக சதாசிவம், கொற​டா​வாக சி.சிவக்​கு​மார் ஆகியோரை அங்​கீகரிக்க வேண்​டும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *