அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய 340-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் 11 பேருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்து, ஜலந்தர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டங்கி பாதை என்ற பெயரில் ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, வெளிநாடுகளுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற டங்கி முகவர்கள் உதவுகின்றனர். சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் அமெரிக்காவில் நுழைய மாணவர் விசா, போலி திருமணங்கள் மூலம் டங்கி பாதை உதவுகிறது.