சட்டவிரோத பந்தய வழக்கு: கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா கைது!

dinamani2F2025 08 122Fazb26v612Fed
Spread the love

சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய மோசடி தொடர்பாக சித்ரதுர்காவைச் சேர்ந்த கர்நாடக எம்எல்ஏ கே.சி. வீரேந்திராவை அமலாக்கத்துறை சனிக்கிழமை அதிரடியாகக் கைது செய்தது.

பந்தய மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் நேற்று (ஆகஸ்ட் 22) பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா சிக்கிமில் உள்ள காங்டாக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் கேங்டாக், சித்ரதுர்கா, பெங்களூரு, ஹூப்ளி, ஜோத்பூர், மும்பை மற்றும் கோவா உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில்

அமலாக்கத்துறையின் பெங்களூரு மண்டல அலுவலகத்தால் சோதனைகள் நடத்தப்பட்டன. கோவாவில் மட்டும், ஐந்து முக்கிய கேசினோக்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *