சதுப்பு நில எல்லைக்குள் ரூ.2000 கோடியில் அடுக்குமாடி திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது திட்டமிட்ட ஊழல்: அரசு மீது பாமக, பாஜக குற்றச்சாட்டு | PMK and BJP accuse govt for apartment project within wetland boundaries

1381487
Spread the love

சென்னை: பள்​ளிக்​கரணை சதுப்​புநில எல்​லைக்​குள் ரூ.2 ஆயிரம் கோடி அடுக்​கு​மாடி திட்​டத்​துக்கு அரசு அனு​மதி அளித்​திருப்​பது திட்​ட​மிட்ட ஊழல் என பாமக, பாஜக குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது.

பாமக தலை​வர் அன்​புமணி: ராம்​சார் தலமாக அறிவிக்​கப்​பட்​டுள்ள சென்னை பள்​ளிக்​கரணை சதுப்​புநில எல்​லைக்​குள் ரூ.2 ஆயிரம் கோடி​யில் 1,250 வீடு​கள் கொண்ட அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை கட்ட தனி​யார் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு அனு​மதி அளித்​திருப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது. இதற்​காக தமிழக அரசு அளித்த விளக்​க​மும் திட்​ட​மிட்ட சதி நடந்​திருப்​பதை உறுதி செய்கிறது.

சதுப்பு நிலங்​களை பாது​காக்க வேண்​டிய தமிழக அரசே, கட்​டு​மான நிறு​வனங்​களு​டன் கூட்​டணி அமைத்​துக் கொண்டு அவற்றை அழிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ராம்​சார் தலங்​களாக அறிவிக்​கப்​பட்ட பகு​தி​களில் கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்​ளக் கூடாது என்று விதி இருக்​கும் நிலை​யில், கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்ள சிஎம்​டிஏ அமைப்​பும், சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​ய​மும் அனு​மதி அளித்​திருப்​ப​தன் மர்​மம் என்ன? பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தில் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு கட்ட வழங்​கப்​பட்ட அனு​ம​தியை தமிழக அரசு ரத்​துசெய்ய வேண்​டும். இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்ற கண்​காணிப்​பில் விசா​ரணை நடத்த ஆணை​யிட வேண்​டும்.

தமிழக பாஜக மாநில செய்திதொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத்: சதுப்பு நிலத்​துக்கு வெளியே உள்ள 1,359 ஏக்​கர் நிலத்தை கண்டறிந்து அனு​மதி வழங்​கிய விவ​காரத்​தில் தமிழக அரசின் வனத்​துறை, சுற்​றுச்​சூழல் துறை, சிஎம்​டிஏ போன்​றவற்​றில் சட்​ட​வி​தி​மீறல்​களால் ஊழல் நடந்​துள்​ளது. தமிழகத்​தில் சதுப்​புநிலக் காடு​களை காக்​கும் வகை​யில் தமிழக சதுப்​புநில மீட்பு ஆணை​யத்தை தமிழக அரசு அமைக்க வேண்​டும்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *