சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி | chattisgarh Girlfriend stabs and kills boyfriend who blocked her on phone

Spread the love

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரசாத் தனது காதலியின் போன் அழைப்புகளையும், மெசேஜ்களையும் தவிர்த்து வந்தார்.

அதோடு தனது காதலியின் போன் நம்பரை தனது போனில் பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து பிரசாத் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக ரோஷ்னி நினைத்தார். எனவே கோபத்தில் தனது காதலன் வீட்டிற்கு கத்தியுடன் ரோஷ்னி சென்றார்.

அங்கு சென்று காதலன் வீட்டுக் கதவைத் தட்டினார். காதலன் கதவைத் திறந்தவுடன் பிரசாத்திடம் போனைக் கொடுக்கும்படி ரோஷ்னி கேட்டார். ஆனால் பிரசாத் போனைக் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் .

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரோஷ்னி, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பிரசாத்தின் நெஞ்சில் குத்தினார். அவர் சத்தம் போட்டு தரையில் விழுந்தார். அவர்களது சத்தத்தைக் கேட்டு பிரசாத்துடன் தங்கி இருப்பவர்கள் ஓடி வந்தபோது பிரசாத் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார்.

நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பிரசாத் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரோஷ்னியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரோஷ்னியிடம் விசாரித்தபோது காதலனை மிரட்டுவதற்காகத்தான் கத்தியை எடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *