இதில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்களான விஜய் ரெட்டி மற்றும் லோகேஷ் சலாமே ஆகியோர் சுட்டுக்கொல்லட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட விஜய் ரெட்டியை 4 மாநில காவல் துறையினர் தேடி வந்ததாகவும், அதற்காக சத்தீஸ்கர் காவல் துறையினர் ரூ.25 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறையினர் ரூ.25 லட்சமும், தெலங்கானா காவல் துறையினர் ரூ.20 லட்சமும் ஆந்திர காவல் துறையினர் ரூ.20 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்ததாகக் கூறியுள்ளனர்.
இதேபோல், லோகேஷ் சலாமியை பிடிக்க, சத்தீஸ்கர் காவல் துறை ரூ.10 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறை ரூ.16 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்தது தெரியவந்துள்ளன.
இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜம்மு – காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு! 167 பேர் மீட்பு!