சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு ரசிகர்கள் வரவேற்பு | Actress Mamta Kulkarni,gave up her ascetic life, is welcomed by fans for her return to TV

Spread the love

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். அவரை கோர்ட் அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதுங்கி இருந்த மம்தா குல்கர்னி நாடு திரும்பினார்.

அவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியதோடு மட்டுமல்லாமல் ஆன்மீகத்திற்கு மாறினார். அவர் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவிற்குச் சென்று கின்னார் அங்காரா ஆன்மிக மடத்தில் சேர்ந்து சன்னியாசியாக மாறினர்.

அங்கு அவர் மகாமண்டலேஷ்வராக உயர்த்தப்பட்டார். ஆனால் அவர் நடித்த படங்களின் காட்சிகள் வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து அவரை மடத்தில் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மம்தா குல்கர்னி சன்னியாசி வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது.

மம்தா குல்கர்னி

மம்தா குல்கர்னி

தற்போது சன்னியாசி வாழ்க்கைக்கு மம்தா குல்கர்னி விடை கொடுத்து இருக்கிறார். சமீபத்தில் மம்தா குல்கர்னி டிவி ஷோ ஒன்றில் பங்கேற்றார். தற்போது அவர் தனது நண்பர்களுடன் கோவாவில் விடுமுறையைக் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

அவற்றை மம்தா குல்கர்னி தன்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சன்னியாசிகள் அணியும் உடையில் இல்லாமல் நவீன உடைகளுடன் காணப்பட்டார். அவர் கோவா கடற்கரையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றினார். ஆனால் அவரது கழுத்தில் உத்திராட்ச மாலை மட்டும் இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *