“சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்”- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!

Spread the love

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு

சபரிமலை கோயில் ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஆகியவை மட்டுமே எனக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ தந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவசம்போர்டு வழிகாட்டு நெறிமுறைகள்படி கோயிலில் விலைமதிப்புமிக்க பொருள்கள் மற்றும் திருவாபரணங்களை கணக்கெடுப்பது, பாதுகாப்பது போன்றவை தேவசம்போர்டுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு ஆகும். நிர்வாகத்தின் முறைகேடுகளை தடுக்க எனக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இல்லை. அதனால், இதுபோன்ற விஷயங்களில் நான் பதில் கூறாமல் இருப்பதை குற்றத்துக்கு கூட்டாக நின்று சதிசெய்ததாக கருதமுடியாது.”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை ஆளும் சி.பி.எம் அரசு சபரிமலை விவகாரத்தில் தந்திரியை பழிவாங்கிவிட்டதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *