
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை நடத்துவது உயர்நீதி மன்றம் ஆகும். தங்கம் கொள்ளை விவகாரத்தில் ஆளும் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை அரசியல் விளையாடுகின்றன. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். கே.சுரேந்திரன் மற்றும் ஷோபா சுரேந்திரன் போன்ற இரண்டு வித்துக்கள் (விதைகள்) கடந்தமுறை சட்டசபையில் இருந்திருந்தால், “மிஸ்டர் சீப் மினிஸ்டர், சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக இங்கே கொண்டு வையடா’ என்ற குரல் கேட்டிருக்கும். அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா. உங்களுக்கு புரிந்துகொள்ளும் விதமாக நான் பேசியுள்ளேன். கிருஷ்ணகுமாரை ஆதரிப்பதன் மூலம் என்னையும் நாட்டின் பிரதமரையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.