சபரிமலை: ஐயப்ப சுவாமி கோயில் தங்கம் கொள்ளை வழக்கு சாட்சியாக மாறும் நடிகர் ஜெயராம் | Sabarimala: Actor Jayaram to become a witness in Ayyappa temple gold robbery case |

Spread the love

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோயில் கருவறையின் முன்பகுதியில் இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிற்பம், திருநடை, கொடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துவார பாலகர்கள் சிற்பத்தின் மீது பொதியப்பட்ட கவசங்கள் மற்றும் கருவறை திருநடை ஆகியவற்றில் செம்பு பொதியப்பட்டு அதன்மீது தங்கம் பூசப்பட்டுள்ளது. தங்கம் பூசும் பணி சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து நடந்துள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

தங்கம் பூசப்பட்ட கோயில் திருநடை போன்றவை பல வி.ஐ.பிக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடத்தி அதற்காக பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்தும் கோயில் திருநடைகள் பூஜை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து அவரிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் ஏற்பட்ட பழக்கம் குறித்து தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக்குழுவிடம் நடிகர் ஜெயராம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *