வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியில் தோன்றிய இரண்டு சமூக-அரசியல் இயக்கங்களான சமூகவுடைமை (சோசலிசம்) மற்றும் பெண்ணியத்திற்கான இணைப்பு புள்ளியாக கிளாரா ஜெட்கின் இருந்தார்.
பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட கிளாரா ஜெட்கின் தன்னை முதன்மையாக சோசலிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், சோசலிசப் பெண்களின் தலைவியாக முக்கியப் பங்காற்றியதால் அவர் பெண்ணியவாதியாகவே விளங்கினார்.
சமுதாயத்தின் நலனுக்கு சோசலிசம் அவசியம் என்ற நம்பிய கிளாரா ஜெட்கினின் தனது பெண்ணியக் குறிக்கோள்களை சோசலிசக் கருத்தியலின் அடிப்படையில் வரையறுத்தார். பெண்கள் தங்களது உரிமைகளை சோசியலிசம் கொண்டே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அவர் கருதினார். எனவே, அவரை சோசலிசம் பெண்ணியம் ஆகிய இரு கொள்கைகளுக்கான தலைவியாகவே திகழ்ந்தார்.
ஜெர்மனியில் அரசியல் தலைவியாக இருந்த காலத்தில், பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திய கிளாரா ஜெட்கின் பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அளித்து அவர்களை சோசலிச இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ஊக்குவித்தார். தொழிற்சங்கங்களில் பணியாற்றிய கிளாரா ஜெட்கின் 1891-ஆம் ஆண்டு முதல் 1917-ஆம் ஆண்டு வரை டை க்ளீச்ஹீட் (சமத்துவம்) (சமத்துவம்) என்ற சோசலிச பெண்கள் பத்திரிக்கையை நடத்தினார். அந்நாளில் ஐரோப்பாவின் மிகப்பெரிய சோசலிச அரசியல் கட்சியான ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் பெரும்பங்காற்றினார்.