சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு | Award for girls who contributed to social progress

1375108
Spread the love

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்​தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்​பில், சிறந்த பெண் குழந்​தைக்​கான விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யுடன் வழங்​கப்​பட்டு வருகிறது.

இவ்​விருதுக்கு பிற பெண் குழந்​தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலா​ளர் ஒழிப்​பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்​தல், பெண்​களுக்கு எதி​ரான சமூக அவலங்​களுக்கு தீர்வு காண ஓவி​யங்​கள், கவிதைகள், கட்​டுரைகள் மூலம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​துதல், ஆண்​கள் மட்​டுமே சாதிக்க முடி​யும் என்​பதை போன்ற செயல்​களை பெண்​களாலும் சாதிக்க முடி​யும் என்று சாதித்​திருத்​தல் போன்ற தகு​தி​களை உடைய பெண் குழந்​தைகள் விண்​ணப்​பிக்க தகுதி பெற்​றவர்​கள் ஆவர்.

முதன்மை கல்வி அலு​வலர், மாவட்ட கல்வி அலு​வலர், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர், ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு​வலர், காவல்​துறை மற்​றும் குழந்​தைகளுக்​காக பணிபுரி​யும் சிறந்த தொண்டு நிறு​வனம் ஆகியோர், இது​போன்ற குழந்​தைகளை கண்​டறிந்து விருதுக்​காக பரிந்​துரைக்​கலாம்.

விருதுக்கு விண்​ணப்​பிக்க http://awards.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் வரும் நவ. 29-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தொடர்ந்து இணை​யதளத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்ள விதி​முறை​கள் மற்​றும் கையேடு தயாரிப்பு குறித்த விளக்​கம் மற்​றும் படிவம் ஆகிய​வற்றை உரிய கருத்​துருவின் நகல்​களு​டன் பூர்த்தி செய்து சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் மாவட்ட சமூக நல அலு​வல​கத்​தில் வரும் டிச.1-ம் தேதிக்​குள் ஒப்​படைக்க வேண்​டும் என, மாவட்ட ஆட்​சியர் ரஷ்மி சித்​​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *