சுவை, செய்முறை மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றின் அடிப்படையில், தனலெட்சுமி, சரோஜினி, மகேஷ்வரி, அமளி ஜாஸ்மின், கார்த்திகா லெட்சுமி, கௌதமி, அனன்யா, தமிழரசன், பாத்திமா மற்றும் நித்யா ஆகிய10 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்வாகினர்.

இரண்டாம் சுற்றான நேரடி சமையல் சுற்றில், போட்டியாளர்கள் பங்கேற்று பல்வேறு விதமான உணவுகளை சமைத்தனர்.
இதனையடுத்து, கீரை காய் சாதம், பருப்புத் துவையல் உள்ளிட்டவற்றைச் சமைத்த நித்யா,சக்கரைவள்ளிக் கிழங்கு குளோப் ஜாமூன், பனீர் ஆம்லெட் சமைத்த பாத்திமா மற்றும் கருப்பட்டி பால்கோவா, வாழை இலை நீர்மோர் தயாரித்த செய்த சரண்யா ஆகிய மூவரும் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.