சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! – என்ன நடந்தது?

Spread the love

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி.

Punjab
Punjab

ஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேயானா போட்டி முலான்பூர் மைதானத்தில் நடைபெற்றது,இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்,

கடந்த சீசனில் குஜராத் அணிக்காக நல்ல தொடக்கத்தை அளித்த கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி இந்த சீசனிலும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆனால் மார்கோ ஜான்சென் வீசிய நான்காவது ஓவரிலேயே (13 )ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் சாய் சுதர்சன்.

அதன் பின் வந்த பட்லர் மற்றும் கில் இணைந்து ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 10வது ஓவரில் சாஹல் வீசிய சுழலில் சிக்கி அவுட் ஆகி வெளியேறினார் கேப்டன் சுப்மன் கில். 200 ரன்களை எளிதாக எட்டி விடலாம் என்று இருந்த குஜராத் பேட்டர்களை,பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த ஆரம்பித்தனர்,

அடுத்து வந்த பிலிப்ஸ் (25),

பட்லர் (38),

வாஷிங்டன் சுந்தர்(18),

தெவாட்டியா(11), ஷாருக்கான் (4), ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழப்பிற்கு 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தனர்.

Connolly
Connolly

இந்த இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஓப்பனர்கள்

பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலயே ரபாடா பந்துவீச்சில் பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். அடுத்து கானலி மற்றும் பிரப்சிம்ரன் ஆட்டத்தை தங்களின் வசம் கொண்டு வந்தார்கள். ஆனால் ரஷீத் கானின் சுழலில் தப்பிக்க முடியாமல் பிரப்சிம்ரனும் (37) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடினாலே வெற்றி நிச்சயம் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணியை, முக்கிய பேட்ஸ்மேன்களான ஸ்ரேயஸ், வதேரா, ஷாஷாங்க் சிங், ஸ்டோய்னிஷ் ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்த ஓவர்களில் கட்டம் கட்டி தகர்த்தனர் குஜராத் பவுலர்கள்.

GT
GT

மறுபக்கம் பொறுப்புடன் ஆடி வந்த கானலி அரைசதம் கடந்து மறுபடியும் வெற்றியை பஞ்சாப் பக்கம் அழைத்து வந்தார். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியை வென்றுள்ளது, அதிகபட்சமாக கானலி 72 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஐபில் தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *