இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்? நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் எனக் கருதுகிறார்கள். தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டோம்.
இந்தப் படம் எடுக்கும்போதே வியாபார ரீதியாக எங்களுக்குக் கைகொடுக்காது என எனக்குத் தெரியும். ஆனால், இந்தப் படம் தனிப்பட்ட முறையில் என்னை ஈர்த்ததால்தான் எடுத்தேன்.
இங்கு தயாரிப்பாளர் சங்கம் என ஒன்று உள்ளது. இதுவரை அந்தச் சங்கம் என்ன கிழித்தது? என்ன கிழிக்கப்போகிறது? இதுவரை அந்தச் சங்கம் செய்தது என்ன என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.
ஒரு படத்துக்கு தியேட்டர் கூட வாங்க முடியாத நிலைதான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. ரகளபுரம் என்ற படத்தில் கருணாஸ் நடித்திருந்தார். 2013-ல் அந்தப் படம் வெளியானது. அந்தப் படத்தின் விநியோகஸ்கர் ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து அழைத்து, கருணாஸ் எனக்கு ரூ.1 லட்சம் பணக் கொடுக்க வேண்டிய பாக்கி இருக்கிறது எனப் பேசினார்.
மூன்று மாதத்துக்கு முன்பே படம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு, கடைசி நேரத்தில் பிரச்னை செய்வதற்குக் காரணம் என்ன? இத்தனைக்கும் கருணாஸ் அந்தப் பணத்தை அந்த நபரிடம் கொடுத்துவிட்டதற்கான ஆதாரத்தையும் வைத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.