சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

Spread the love

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வரும் சவுக்கு சங்கர், கைது நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது சிறையில் இருக்கிறார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியான சவுக்கு சங்கர், பிணை நிபந்தனைகளை மீறியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் சவுக்கு சங்கரை ஆந்திராவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறையில் தற்போது சங்கர் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் மறைவு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *