பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார்.
பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை.

இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.