சாத்தான்குளம் கொலை வழக்கு; மூன்று மணி நேரம் விசாரணை செய்த நீதிபதி; குற்றவாளிகள் தெரிவித்தது என்ன?

Spread the love

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களையும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கேட்டார் நீதிபதி.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை இறந்துவிட்டார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 9 காவலர்கள்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 9 காவலர்கள்

இந்த வழக்கின் விசாரணையானது கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி கைதான 9 பேரும் குற்றவாளிகள் எனவும் தண்டனை விபரங்கள் மார்ச் 30 ஆம் தேதி தெரிவிக்கப்படும் அதற்குள் குற்றவாளிகளின் மனநிலை மற்றும் அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பள விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி முத்துகுமரன் உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *