சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

Spread the love

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை இரவில் திடீரென பற்றிய தீயால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் குப்பை கிடங்கில் நேற்றிரவு(ஆக.25) திடீரென தீப்பற்றியது. மளமள என பரவிய தீ, நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொளுந்துவிட்டு எரிந்தது.

இந்தத் தீயினால் நகராட்சிக்குள்பட்ட தேரடி தெரு, பெருமாள் கோயில் தெரு, வடக்கு ரத வீதி முக்குராந்தல் வரை புகை மண்டலமாக காட்சியளித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *