சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அதே வேட்கையுடன் துபைக்குச் சென்றுள்ளது. மேலும் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சதமும், துணை கேப்டன் கில் சதம், 2 அரைசதமும், கோலி, ஸ்ரேயாஸ் என அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் கணித்துள்ளார்.