சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும்! -ஆஸி. முன்னாள் கேப்டன்

Dinamani2f2025 02 182f6stgzyb32fclarke.jpg
Spread the love

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அதே வேட்கையுடன் துபைக்குச் சென்றுள்ளது. மேலும் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சதமும், துணை கேப்டன் கில் சதம், 2 அரைசதமும், கோலி, ஸ்ரேயாஸ் என அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் கணித்துள்ளார்.

இதையும் படிக்க… தந்தை மறைவு: தாயகம் திரும்பினார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *