சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான்தவி, மற்ற நாடுகளின் அணிகள் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி குறித்த அறிவிப்பை, இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், இன்று நண்பகலில் அறிவிப்பார் என்று எதிர்க்கப்படுகிறது.