சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

Dinamani Logo.png
Spread the love

மதுரை: மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கல் அஞ்சலி செலுத்தினர்.

தமிழறிஞா் சாலமன், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் மதுரை அரசகுடி ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிரார். இவரது மனைவியான ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவுக் காரணமாக ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *