ராமநாதபுரம் களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (33). இவரது கணவர் பூவலிங்கம். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வளர்மதி, நேற்று கொத்தனார் வேலைக்கு சென்ற தனது கணவர் பூவலிங்கத்திற்கு மதிய உணவு கொடுப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். பாரதி நகரில் இருந்து ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த வளர்மதியின் டூவீலர் சாலையில் குவிந்து கிடந்த மணலில் சிக்கி நிலை தடுமாறியது.

இதனால் சாலையில் சாய்ந்த டூவீலரில் இருந்து வளர்மதியியும் சாலையில் விழுந்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து சாலையில் விழுந்து கிடந்த வளர்மதியின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் வளர்மதி அந்த இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.