சாலையோரங்களில் தற்காலிகமாக வைக்கப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders Rs 1000 fee for flagpoles temporarily placed on roadsides

1379955
Spread the love

சென்னை: அரசி​யல் கட்​சிகள் மற்​றும் பிற அமைப்​பு​களின் நிகழ்​வு​களுக்​காக சாலை​யோரங்​களில் தற்​காலிக​மாக கொடிக்கம்பங்​கள் வைக்க அனு​மதி கோருபவர்​களிடம் ஒரு கொடி கம்​பத்​துக்கு தலா ரூ.1,000 கட்​ட​ண​மாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பொது இடங்​கள் மற்​றும் தேசிய – மாநில நெடுஞ்​சாலைகள், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்​த​மான இடங்​களில் அனு​ம​தி​யின்றி சட்​ட​விரோத​மாக வைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்​சிகள் மற்​றும் பிற அமைப்​பு​கள், சங்​கங்​களின் கொடிக்​கம்​பங்​களை ஏப்​.28-க்​குள் அகற்ற வேண்​டுமென உயர்நீதி​மன்ற மதுரை கிளை உத்​தர​விட்​டிருந்​தது.

அதன்​படி அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​களின் சார்​பில் கொடிக்​கம்​பங்​கள் அமைக்க அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக மண்டல மற்​றும் மாவட்ட அளவில் குழுக்​களை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​தது. மேலும், அரசி​யல் கட்​சிகள் மற்​றும் அமைப்​பு​களின் சார்​பில் நடத்​தப்​படும் நிகழ்​வு​களுக்​காக தற்​காலிக​மாக கொடிக்​கம்​பங்​கள் அமைப்பதற்கான வழி​காட்டு நெறி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அரசுத்​தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ரவீந்​திரன், கொடிக்​கம்​பங்​களை அமைப்​பது தொடர்​பாக அரசாணை​யும், வழி​காட்டு விதி​முறை​களும் வகுக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்​தார்.

அதையேற்க மறுத்த நீதிப​தி, அரசி​யல் கட்​சிகள் நடத்​தும் பொதுக்​கூட்​டங்​கள், மாநாடு போன்ற நிகழ்​வு​களின்​போது சாலைகளின் நடுவே உள்ள சென்​டர் மீடியன் பகு​தி​களி​லும் சட்​ட​விரோத​மாக கொடிக்​கம்​பங்​கள் வைக்​கப்​படு​கின்​றன. அவ்​வாறு கொடிகளை கட்​டு​வோருக்கு எதி​ராக எந்த நடவடிக்​கை​யும் எடுப்​ப​தில்​லை.

எனவே, அரசி​யல் கட்​சிகள் மற்​றும் பிற அமைப்​பு​களின் நிகழ்​வு​களுக்​காக சாலை​யோரங்​களில் தற்​காலிக​மாக கொடிக்​கம்​பங்​கள் வைக்க அனு​மதி கோருபவர்​களிடம் ஒரு கொடி கம்​பத்​துக்கு தலா ரூ.1,000 கட்​ட​ண​மாக வசூலிக்க வேண்​டும். இவ்​வாறு கட்​ட​ணம் வசூலிப்​ப​தன் மூலம் அரசுக்​கும் வரு​வாய் கிடைக்​கும் என்​றார்.

மேலும், கொடிக்​கம்​பங்​கள் அமைப்​பதற்கான விதி​களை கண்​டிப்​பாக அமல்​படுத்த வேண்​டுமென அனைத்து துறைத்தலை​வர்​களுக்​கும் சுற்​றறிக்கை பிறப்​பிக்க வேண்​டுமென தலை​மைச் செயலருக்​கும், டிஜிபிக்​கும் உத்​தர​விட்​டார். அனு​ம​தி​யின்றி சட்​ட​விரோத​மாக கொடிக்​கம்​பங்​களை வைப்​போருக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​காத அதி​காரி​கள் மீது துறைரீ​தி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டுமென அரசுக்கு உத்​தர​விட்ட நீதிப​தி, வழக்கு விசா​ரணையை நவ.12-க்கு தள்ளிவைத்​துள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *