சாலை விபத்தில் மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் பலி!

Dinamani2f2025 01 192feufx8obb2fnewindianexpress2024 081c26ce7c 3d4f 4d6e 9cd5 3d3692ec6ae8manu B.avif
Spread the love

ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழிப் பாட்டியும் மாமாவும் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.

ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும், மாமா யுத்வீர் சிங்கும் ஞாயிற்றுக்கிழமை, சர்க்கி தாத்ரியில் உள்ள மகேந்திரகர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, தவறான பாதையில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து யுத்வீர் சிங் வாகனத்தின் மீது மோதியது. கார் மோதியதில், யுத்வீர் சிங்கும் சாவித்ரி தேவியும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *