சூரக்காடு பகுதியில் பூம்புகாா் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இச்சாலையின் இருபுறமும் நூற்றாண்டுகளைக் கடந்த புளிய மரங்கள் அடந்திருந்தன. இந்த மரங்களில் காலம் காலமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வந்தன. விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சூரக்காட்டில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இருந்த புளிய மரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டன. இதையடுத்து, அப்பகுதி மரங்களில் வசித்த குரங்குகள் பூம்புகாா் சாலையில் உள்ள புளிய மரங்களில் தஞ்சமடைந்தன.
Related Posts
மோடியின் முதல் கையெழுத்து
- Daily News Tamil
- June 10, 2024
- 0