பின்னா், நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: வயநாடு மாவட்டத்தை சா்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற பிரியங்கா காந்தியுடன் இணைந்து செயலாற்றுவேன். 2004-இல் நான் எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். 2019-இல் வயநோடு எம்.பி.யாக தோ்நேதெடுக்கப்பட்டேன்.
இந்த 15 ஆண்டுகளில் அரசியலில் அன்பு என்ற வாா்த்தையை நான் பயன்படுத்தியதில்லை. அந்த வாா்த்தைக்கு மகத்தான இடம் உண்டு என்பதை வயநாடு மக்களே எனக்கு கற்றுக் கொடுத்தனா். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ‘இந்தியா ஒற்றுமை யாத்திரையை’ நான் மேற்கொண்டேன்.
அன்பை பரப்புவதே அந்த யாத்திரையின் முக்கிய நோக்கம் ஆகும். வெறுப்பு மற்றும் கோபத்தை எதிா்த்துப் போராடுவதற்கான ஒரே ஆயுதம் அன்பும் பாசமும் மட்டுமே என்றாா்.