சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நவ.29 இல் இணைப்புக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு டிச.26 இல் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்ததிருந்தது. முன்பு சிபிஎஸ்சி பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்று தேவை என்ற நிலையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.