புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள விசாரணை முகமைகளால், தேடப்படும் குற்றவாளிகள் உள்பட அனைத்து குற்றவாளிகளின் விபரங்களை சிபிஐ வடிவமைத்துள்ள ‘பாரத்போல்’ தளத்தில் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் இன்று(ஜன. 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பாரத்போல்’ தளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.