நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது, நாயகனாக நடித்து வரும் சந்தானம் சிம்பு படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் சந்தானம் கூறியதாவது:
ஒருநாள் சிம்புவிடமிருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்கிறாயா? எனக் கேட்டார். அவர் கேட்டால் எப்போதும் ஆமாம் என்றுதான் சொல்லுவேன்.
எனது படத்தில் பிஸியாக இருந்தாலும் சிம்பு கேட்டதால் உடனே சரி என்றேன். எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.