சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி

Dinamani2f2025 03 062ftverwum72filayaraja.jpg
Spread the love

சென்னை: சிம்பொனி நிகழ்ச்சி நம் நாட்டின் பெருமை, என்னுடை பெருமை அல்ல என சிம்பொனி நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியல் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல. நாட்டின் பெருமை… இந்தியாவின் பெருமை. இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையராஜா என்றார்.

மேலும், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் நான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றார்.

இசை நிகழ்ச்சியின் மகிழ்ச்சி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு சிம்பொனி இசை நிகழ்ச்சி உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும் என பதிலளித்த இளையராஜா, இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *