சிறப்புப் படை,12 விமானங்கள் மூலம் ஈரானில் விமானி மீட்பு: விமானம், 2 ஹெலிகாப்டரை இழந்த அமெரிக்கப் படை \ Pilot Rescued in Iran bySpecial Forces and 15 Aircraft: US Forces Lose One Plane and Two Helicopters

Spread the love

இத்தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுள்ள செய்தியில், ”பைலட் மீட்பு ஆபரேசனில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர ஒரு சி-130 ராணுவ விமானம், இரண்டு ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குவைத் வான் பரப்பில் ஏ-10 விமானம் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.

ஈரானில் தப்பியது எப்படி?

ஈரானில் இரண்டு நாட்களுக்கு முன்பு F-15E விமானம் விழுந்தவுடன் அதில் இருந்த இரண்டு பைலட்களும் உயிரோடு தப்பினர். ஒருவர் உடனே மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் ஈரானில் சிக்கிக்கொண்டார். அவர் அங்கிருந்து எப்படித் தப்பினார் என்பது பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விமானத்தில் இருந்து கீழே குதித்தவுடன் சம்பந்தப்பட்ட பைலட் சம்பவ இடத்தில் இருந்து உடனே வேறு இடத்திற்கு குறிப்பாக மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

ஈரான் படைகள் ஒருபுறம் அவரைத் தேடிக்கொண்டிருந்தன. மற்றொரு புறம் அமெரிக்கப் படைகள் சிறப்பு விமானம், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேட ஆரம்பித்தன. சிறப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் மலைப்பகுதியில் இறங்கி தேடினர்.

மற்றொரு புறம் ஈரான் படைகள் சம்பவ இடத்திற்கு நெருங்குவதைத் தடுக்க அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து வெடிகுண்டுகளைப் போட்டு தடங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

மலைகளுக்குள் மறைந்து இருந்த அமெரிக்க பைலட் தான் கீழே விழுந்த உடன் எந்த இடத்தில் இருக்கிறேன் என்ற தகவலை அமெரிக்கப் படைகளுக்குத் தெரிவித்தார். அதனால்தான் அமெரிக்கப் படையால் குறிப்பிட்ட இடத்தில் தேட முடிந்தது. மீட்கப்பட்ட பைலட் உடனே சிகிச்சைக்காக துபாய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *