இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலன் சார்ந்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சிறுபான்மையின மக்களின் உரிமைகளையும் நலன்களையும் காத்து, அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையோடு வாழும் நல்லிணக்கம் மிக்க மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
ஆனால், இந்திய அளவில் நிலவும் சூழல் நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. அதனை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!
எந்நாளும் எந்த நிலையிலும் மதச்சார்பின்மையைக் காத்து, சிறுபான்மையினருக்கு அரணாகத் திராவிட மாடல் உறுதியாக நிற்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.