“சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக கட்சிகள் பார்க்கின்றன” – மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேர்காணல் | exclusive interview with MJK President Thamimum Ansari

Spread the love

மனிதநேய மக்​கள் கட்​சி​யில் இருந்த மு.தமி​முன் அன்​சா​ரி, 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் சேப்​பாக்​கம்​-​திருவல்​லிக்​கேணி தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியை தழு​வி​னார். 2015-ல் அந்த கட்​சி​யில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்​சியை (மஜக) தொடங்​கிய தமி​முன் அன்​சா​ரி, 2016 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் நாகப்​பட்​டினம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

2019 மக்​களவை தேர்​தலில் பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி வைத்​த​தால், அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​னார். அந்த தேர்​தல் மட்​டுமின்​றி, 2021 சட்​டப்​பேரவை தேர்​தல், 2024 மக்​களவை தேர்​தல் மற்​றும் வரவுள்ள 2026 சட்​டப்​பேரவை தேர்​தலிலும் திமுக கூட்​ட​ணி​யில் பயணிக்​கும் தமி​முன் அன்​சாரி ‘இந்து தமிழ் திசை’க்​காக அளித்த சிறப்பு பேட்​டி:

எதிர்க்​கட்​சிகள் சொல்​வதைப் போல் திமுக அரசு சட்​டம் ஒழுங்கை பாது​காக்க தவறி விட்​டது, தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறை​வேற்​ற​வில்லை என்​பதை ஏற்​கிறீர்​களா?

எல்லா மாநிலங்​களி​லும் எதிர்க்​கட்​சிகள் சொல்​வது சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது என்​பது தான். ஆனால், தமி​ழ​கத்​தில் மக்​கள் அமை​தி​யாக உள்​ளனர். மக்​களின் அன்​றாட வாழ்​வுக்கு எவ்​வித பங்​க​மும் நேர்​வ​தில்​லை. பெண்​கள் அச்​சமின்றி வெளியே சென்​று​விட்டு வீட்​டுக்கு வரு​கின்​ற​னர். மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை ஒன்​றன் பின் ஒன்​றாக திமுக நிறை​வேற்றி வரு​கிறது. இன்​னும் 6 மாதம் இருப்​ப​தால், மீத​முள்ள வாக்​குறு​தி​களை​யும் திமுக நிறை​வேற்​றும் என்ற நம்​பிக்கை மக்​களுக்கு இருக்​கிறது.

திமுகவை ஆதரிக்​கும் சிறு​பான்மை மக்​களின் கோரிக்​கை​கள் அனைத்​தும் இந்த ஆட்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ள​தா?

சிறு​பான்​மை, பெரும்​பான்மை மக்​கள் இடையே நல்​லிணக்​கம் நிலவ வேண்​டும் என்ற அடிப்​படை​யில் திமுக ஆட்சி நடத்தி வரு​கிறது. மனுக்​களை கொடுக்​கி​றோம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. சிறு​பான்மை மக்​களின் ஒரே நோக்​கம் என்​பது, அவர்​கள் கல்​வி​யிலும், பொருளா​தா​ரத்​தி​லும் முன்​னேற வேண்​டும் என்​பது​தான். அதற்கு இடஒதுக்​கீட்டை கொடுத்​தது திமுக. அந்த இடஒதுக்​கீட்டை உயர்த்தி தர வேண்​டும் என்ற கோரிக்கை பரவலாக உள்​ளது. அதனை நாங்​களும் வலி​யுறுத்தி வரு​கி​றோம்.

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதையும், நீக்கப்படுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

டெல்​லி​யில் இருப்​பவர்​களின் உத்​தர​வு​களுக்கு ஏற்ப செயல்​படு​வ​தால், அந்த கட்​சி​யில் அடுத்​தடுத்து குழப்​பங்​கள் ஏற்​படு​கிறது. இதனால், அந்த கட்​சி​யில் உள்ள உண்மை தொண்​டர்​கள் விரக்​தி​யில் உள்​ளனர். இதே நிலை தொடர்ந்​தால் அதி​முக தனது அரசி​யல் இருப்பை இழக்க நேரிடும். அது தமி​ழ​கத்​துக்​கும் அதி​முக​வுக்​கும் நல்​லதல்ல.

தமி​ழ​கத்​தில் வரவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் நீங்​கள் எத்​தனை இடங்​கள் கேட்க திட்​ட​மிட்​டுள்​ளீர்​கள்? அப்​படி கேட்​கும் இடங்​கள் கொடுக்​காத பட்​சத்​தில் மீண்​டும் அதி​முக பக்​கம் செல்ல வாய்ப்​புள்​ள​தா?

இடப்​பங்​கீடு பேச்​சு​வார்த்​தைக்கு அழைக்​கும்​போது, எங்​களு​டைய கோரிக்​கையை கொடுப்​போம். 2019 மக்​களைவை தேர்​தல், 2021 சட்​டப்​பேரவை தேர்​தல், 2024 மக்​களவை தேர்​தலில் இடங்​கள் கிடைக்​க​வில்லை என்​றாலும் திமுக கூட்​ட​ணிக்கு நாங்​கள் கடுமை​யாக உழைத்​தோம். இந்த முறை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், எங்​களுக்கு உரிய அங்​கீ​காரத்தை வழங்​கு​வார் என்ற நம்​பிக்கை உள்​ளது. கொள்கை ரீதி​யாக திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கி​றோம். மீண்​டும் அதி​முக என்ற பேச்​சுக்கு இடமில்​லை.

தமி​ழ​கத்​தில் வரவுள்ள தேர்​தலில் சிறு​பான்மை மக்​கள் எந்த விஷ​யத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து வாக்​களிப்​பார்​கள்?

பாசிசம் தலை விரித்​தாடும் நிலை​யில், அதனை எதிர்ப்​பது தான் கடமை. பாசிசத்தை வீழ்த்த சிறு​பான்மை மக்​கள் வாக்​களிப்​பார்​கள்.

சிறு​பான்மை மக்​களுக்கு திமுக உள்​ளிட்ட தமிழக அரசி​யல் கட்​சிகள் போது​மான முக்​கி​யத்​து​வம் அளிக்​கிற​தா?

ஒவ்​வொரு அரசி​யல் கட்​சி​யும் முஸ்​லீம் மட்​டுமின்றி ஒவ்​வொரு சமூகத்​துக்​கும், அவர்​களு​டைய மக்​கள் தொகைக்கு ஏற்ப தேர்​தலில் போட்​டி​யிட வேண்​டிய வாய்ப்பை வழங்க வேண்​டும்.

சிறு​பான்​மை​யினரை ஓட்டு வங்​கி​யாக அரசி​யல் கட்​சிகள் பார்க்​கும் அணுகு​முறை சரி​யான​தா?

ஜனநாயகத்​தில் ஒவ்​வொரு சமூகத்​தை​யும், அரசி​யல் கட்​சிகள் வாக்கு வங்​கி​களாக தான் பார்க்​கி​றார்​கள். நாடு​முழு​வதும் இதே நிலை தான் உள்​ளது. ஆனால், அவர்​களை வாக்கு வங்​கிக்கு மட்​டும் பயன்​படுத்​தி​விட்​டு, அந்த சமூகங்​களுக்கு எது​வும் செய்​யாமல் போனால், அது தவறு. தமி​ழ​கம், கேரளா​வில் அவ்​வாறு இல்​லை. சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களை பெற்று வெற்றி பெற்ற பிறகு, அவர்​களின் கோரிக்​கை​கள் நிறை​வேற்​றுகின்​ற​னர். ஆனால், வடமாநிலங்​களில் சிறு​பான்மை மக்​கள் வாக்கு வங்​கி​களாக மட்​டுமே உள்​ளனர் என்​பது கசப்​பான உண்​மை.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) பற்றி உங்​கள் கருத்து என்ன? இதில், சிறு​பான்​மை​யினர் வாக்​கு​கள் அதி​கம் நீக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டப்​படு​வது உண்​மை​தா​னா? அது எப்​படி?

பாஜக அரசு சிஏஏ, என்​ஆர்​சி, என்​பிஆர் என மூன்று வகை​யான குடி​யுரிமை சட்​டங்​களை கொண்டு வந்​தது. சிஏஏ-வை நிறை​வேற்​றி​விட்​டனர். என்ஆர்சி-யில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. அதனை அமல்படுத்துவதில், அவர்களுக்கு அதிக தடைகளும், எதிர்ப்புகளும் வந்தன. தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தில் வழியாக அதனை செயல்படுத்த துடிக்கிறார்கள்.

என்ஆர்சி-யின் நகல் தான் எஸ்ஐஆர். கொல்லை புறம் வழியாக அதனை அமல்படுத்த துடிக்கிறார்கள். முன்பு சிறுபான்மை மக்களின் குடியுரிமை மட்டும் தான் களவாடும் நிலை இருந்தது. இப்போது அனைத்து மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் காங்​கிரஸ், தவெக தலை​வர் விஜய் தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு செல்ல வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறதே. அப்​படி என்​றால் திமுக கூட்​டணி உடைய வாய்ப்​புள்​ள​தா?

திமுக கூட்​டணி பலவீனம் அடைய வேண்​டும் என்று பலரும் எதிர்​பார்க்​கின்​ற​னர். இது கொள்கை ரீதி​யாக அமைந்த கூட்​டணி என்​ப​தால், அவர்​களின் கனவு பகல் கனவாக தான் முடி​யும். முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கும், ராகுல்​காந்​திக்​கும் தனிப்​பட்ட நட்பு நெருக்​க​மாக உள்​ளது. அதனை யாராலும் பிரிக்க முடி​யாது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் வெளி​யேறு​வதற்கு வாய்​ப்பு இல்​லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *