இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் வி.ஜி. வினோத் குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மேற்கொண்டு விசாரணைக்காக நூரநாடு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 18 வயது தலித் சிறுமியை 5ஆண்டுகளுக்கும் மேலாக 59 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 57 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.