சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் : பெங்களூரை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஹோட்டல்கள் மூடல்? – Kumudam

Spread the love

ஈரான், இஸ்ரோல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் கள் விநியோகம் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது. மதுரையைப் பொருத்தவரை, இன்றும், வரும் ஓரிரு நாட்கள் மட்டுமே ஹோட்டல்கள் இயங்க முடியும். எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இரு நாள்களுக்குள் சீரடையாவிட்டால் 3-ஆவது நாள் முதல் ஹோட்டல்களை மூட நேரிடும்.

ஹோட்டல்கள்  மூடப்பட்டால் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் எதிா்கொள்ள நேரிடும்.மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் போ் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர்கள் விநியோகத்தை உடனடியாக சீரடையச் செய்ய வேண்டியது என மதுரை ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதே போன்று, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர்கள் விநியோகம் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. ஹோட்டல்கள்  மூடப்பட்டால் விடுதிகளில் தங்கிப் பணியாற்றுவோா், கல்விப் பயிலுவோா், வெளியூா்களிலிருந்து மருத்துவச் சேவைகளுக்காக வருவோா், சுற்றுலாப் பயணிகள் என பலதரப்பட்டவா்களும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *