சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

Spread the love

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலைசெய்ய முயன்ற சம்பவத்தில், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்தவர் அக்பர் அலி (50). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (35). இவர்களுக்கு பர்வீன் (18), பாருக் (13) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் அக்பர் அலியின் தாயார் சிக்கந்தர் பீவி (60) வசித்து வருகிறார். நீண்டகாலமாக இவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அக்பர் அலி திடீரென பெட்ரோல் கேனை எடுத்து வந்து, தனது மனைவி செய்யது அலி பாத்திமா, மகள் பர்வீன், மகன் பாருக், தாயார் சிக்கந்தர் பீவி ஆகிய நான்கு பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *